Color Socrling

தகவல்தளம் இணையதளத்தில் உங்கள் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ளவும் Cell :9941681652e-mail : info@thagavalthalam.com*****தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். Cell :9941681652 e-mail : info@thagavalthalam.com
Showing posts with label முல்லைப் பெரியாறில் தண்ணீர் பற்றாக்குறை. Show all posts
Showing posts with label முல்லைப் பெரியாறில் தண்ணீர் பற்றாக்குறை. Show all posts

முல்லைப் பெரியாறில் தண்ணீர் பற்றாக்குறை : இரண்டாம் போகம் விவசாயம் பாதிப்பு

     முல்லைப் பெரியாறு அணையில் போதுமான தண்ணீர் இல்லாததால், அதை நம்பி இரண்டாம் போகம் பயிரிட வேண்டாம் என விவசாயிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் நடைபெற்ற விவசாயிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் இந்த கோரிக்கை வைக்கப்பட்டது. இரண்டாம் போகத்திற்கான நடவுப் பணிகளை தொடங்கிவிட்டதாக விவசாயிகள் தெரிவித்ததை அடுத்து, தற்போது வெளியேற்றப்பட்டு வரும் தண்ணீரின் அளவை 480 கன அடியில் இருந்து 300 கன அடியாக குறைத்து கூடுதல் நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.
எனினும் 50 நாட்களுக்கு மட்டுமே இந்த தண்ணீர் கிடைக்கும் என்பதால், இரண்டாம் போக விவசாயத்தில் பாதிப்பு இருக்கும் என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இன்றைய நிலவரப்படி முல்லைப் பெரியாறு அணையில் 118 அடி நீர் இருப்பு உள்ளது. 108 அடி வரை மட்டுமே நீர் எடுக்க முடியும்.
 -இணைய செய்தியாளர்-தேனி ராஜா